August 27, 2013

கிராமத்து விளையாட்டுகள்


*கிராமத்து விளையாட்டுகள்*

  தாம்பரம் இறங்குறவங்க எல்லாம் இறங்குங்க, சத்தம் கேட்டு விழித்து சுதாரிப்பானார் ராமசாமி. நீண்ட தூரம் பேருந்து பயணம் செய்வது தன் வாழ் நாளில் இது பத்து தடவைக்குள் இருக்கலாம். சன்னல் கண்ணாடியை ஒரு புறம் ஒதுக்கி தள்ளிவிட்டு வெளியே பார்த்தார், நன்றாக விடிந்துவிட்டிருந்தது, சூரியன் மேக மூட்டத்துக்குள் செங்கல்மங்கலாக தெரிந்தான்.

  கோவிந்தசாமி தன் பேத்திக்கு திருமணம் நிச்சயத்திருப்பதாகவும், திருமணத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்றும் கடந்த மாதம் ஊர் வந்து அழைப்பிதல் குடுத்திருந்தான். பால்ய கால சினேகிதன், ஒன்றாக பத்தாவதுவரை கிராமத்து பள்ளியில் படித்தவன். ஓனான் பிடிப்பது, கம்மாக் கரையில் நண்டு பிடித்து சுட்டு சாப்பிடுவது, பம்பரம், கில்லி, கிளியிறக்கம், கபடி, சைக்கிள் டயர்/ரிம் உருட்டுவது, ஆடுபுலி ஆட்டம், தாயகட்டு, எறிபந்து, குழிபந்து, கிணற்றில் டைவ் அடித்து நீச்சல் அடிப்பது,  என்று வருடம் முழுவதும் ஏதாவது ஒரு விளயாட்டு என்று கூடவே சுற்றி திருந்த காலம் அது.

  கோவிந்தசாமி கல்வி, வேலை என்று கிராமத்தை விட்டு கிளம்பிவிட ராமசாமி பத்தாவதில் பெயில் ஆனவுடன் விவசாயம், ஆடு மாடுகள் என்று கிராமத்தோடு ஒன்றிவிட்டிருந்தார். கோவிந்தசாமி மாதம் ஒருமுறை என்று ஊர் வந்தவர், அடுத்து ஆறுமாதம், ஒருவருடம் என்ற இடைவெளியாகி... இறுதியாக பத்தாண்டுகளுக்கு முன் நாட்டாமை வீட்டு விசேசத்திற்கு வந்தவர், போனமாதம்தான் பேத்தியின் திருமண அழைப்பிதல் குடுக்க ஊர் வந்திருந்தார்.

  ராமசாமியும் ஊர் முழுவதும் அழைப்பிதல் குடுக்க கூடவே சுற்றினார். பால்ய கால நினைவுகள் துரத்த கம்மாக்கரை மேட்டில் உட்கார்ந்து மணிக்கணக்காக பேசினார்கள். கடந்த சில வருடங்களாகவே சக வயது நண்பர்கள் பலரின் மறைவுகளால் தனிமைப் பட்டுக்கொண்டு இருக்கிறோமோ என்று, மனதை கொஞ்சம் உலுக்கவே செய்திருந்தது.

  ”பெரியவரே வரேங்க பார்க்கலாம், இதில் முகவரி இருக்கு, நேரமிருந்தா வீட்டுக்கு வந்துட்டு போங்க, பக்கத்து சீட்டு இளைஞனின் வேண்டுகோளால் சுய நினைவிற்கு வந்தார் ராமசாமி. பக்கத்து ஊர் மாரிச்சாமியின் மகனாம். சின்ன வயதில் பார்த்தது, மாரிச்சாமியின் மறைவிற்கு பின் அவர் வீட்டின் பரிச்சயம் நின்றுபோனது. தேனியில் பஸ் ஏறும் போதே என்னை அடையாளம் கண்டு கொண்டு நலம் விசாரித்தவன். இப்போது சென்னையில் பெரிய வேலையில் இருப்பதாக சொன்னான். படிப்பு வராமல் வேறு வேலை தெரியாதவர்கள் மட்டுமே ஊர் தங்கி விவசாயம் பார்ப்பது என்றாகிவிட்டது. அதிலும் பலர், சித்தாள், கொத்தனார் என்று வெளியூர் , சவூதிஅரேபியா என்று சென்று விடுகிறார்கள்.

  போனதலைமுறை போல அல்லாமல் கிராமத்திலும் இப்போது படித்தால் சம்பாதித்து சுகமாக இருக்கலாம் போன்ற புரிதல்கள் ஆரம்பித்து, இருப்பவர் இல்லாதவர் என்ற பாகுபாடின்றி எல்லாரும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போக்கு அதிகரித்துவிட்டது. பள்ளி படிப்பிற்காக கடன் வாங்குவது கூட சகஜமாகிவிட்டது, அதனால் தானோ என்னவோ, பள்ளி முடிந்து வீடு வரும் குழந்தைகளை விளையாட விடாமல், படிப்பு படிப்பு என்று வாட்டி எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள், மீதி நேரம் டிவி பார்ப்பதில் கழிந்து, ஓடியாடி விளையாடுவது என்பது பட்டணம் போல் கிராமத்திலும் மிகவும் குறைந்துவிட்டது.

  ஊருக்கு வந்த கந்தசாமி, கிராமத்தில் விடலைகள் விளையாடுவது குரைந்திருப்பது கண்டு, ம்ம்ம், இங்கே விளையாடுறது குறைஞ்சிருக்கு, பட்டணத்தில இப்பதான் விளையாடுறது அதிகமாயிருக்கு, நாம விளையாண்ட அத்தனை விளையாட்டுகளும் இப்போது பட்டணத்தில் ரொம்ப பிரபலம் ஆகிவிட்டது தெரியுமா?, என் பையனுக்கு எல்லா விளையாட்டுகள், அதன் வரையறைகள்னு சொல்லி குடுத்து, இப்ப அவன் சூப்பரா விளையாடுறான் தெரியுமா? என்று சொல்லியிருந்தான். அப்பாடா பட்டணத்து குழந்தைகளாவது விளையாடி உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுகிறார்களே என்று ராமசாமி மனதில் எண்ணிகொண்டார்.

  பேருந்தின் சன்னல் வழியே பார்வையை ஓட்டினார். இன்று ஞாயிற்றுக் கிழமை, பள்ளிகளுக்கு விடுமுறை தினம். கோயம்பேடு போய் சேருவதற்குள் கிராமத்து விளையாட்டுகளை எப்படி விளையாடுகிறார்கள் என்று பார்த்துவிட ஆர்வம் அதிகமாகி, பார்வையை சன்னல் வழியே செலுத்தினார். பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. ஆங்காங்கே விளையாட்டு திடல்கள் ஒன்று இரண்டு தட்டுபட்டாலும், அதில் மிக சொற்பமான அளவில் சிலர் கிரிக்கெட் மட்டுமே விளையாடுவது தெரிந்தது. கில்லி, பம்பரம், கபடி, எறிபந்து என்று யாரும் விளையாடியதாக தெரியவில்லை.

  கந்தசாமி சொன்னானே, அவன் பொய் சொல்லுபவன் கிடையாதே?, ராமசாமியின் மனதில் பல்வேறு கேள்விகள். கோயம்பேடு பேருந்து நிலையம் இறங்கும் போது அழைத்துச் செல்ல கந்தசாமி காத்திருந்தார்.

  வீடு வந்து குளித்து முடித்து காலை உணவு முடிந்தது. அதற்கு மேல் ராமசாமியால் பொறுமை காக்க முடியாமல் கேட்டே விட்டார். “எலேய் கந்தா, ஏதோ பட்டணத்தில் பசங்க எல்லாம் விளையாடுறது அதிகமாகிடுச்சி, நம்மூர்ல நாம விளையாண்ட விளையாட்டெல்லாம் ரொம்ப ஆர்வமா விளையாட ஆரம்பிச்சிட்டாங்கனு சொன்னியே, பேருந்துல வந்த போது பார்த்தேன், கண்ணுக்கு எட்டிய தூரம் யாரும் விளையாடி பார்க்கலையே?, என்று கேட்டுவிட்டார்.

  அட ராமசாமி உண்மைதான், வா காமிக்கிறேன் என்று வீட்டின் மூலையில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார், அறையில் கண்ட காட்சியை பார்த்து திகைத்துப் போய் நின்றார் ராமசாமி.

  ஆமாம் அந்த அறையில் கந்தசாமியின் 15 வயது பேரன், கம்யூட்டரில் கபடி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தான். கந்தசாமி மேலும் சொன்னார், இங்கே மட்டும் இல்லை ராமசாமி, கிட்டதட்ட பட்டணத்தில இருக்கிற எல்லார் வீட்லயும் பசங்க நம்மூர் விளையாட்டுகளைத் தான் விளையாடுறாங்க...!



பி.கு : சின்னதா கதை ஒன்னு எழுதலாம் என்ற எண்ணத்தில், என் முதல் முயற்சி...


August 01, 2013

மாபெரும் பதிவர் திருவிழா 2013- முக்கிய அறிவிப்பு

பதிவுலகத் தோழமைகளுக்கு வணக்கம்.. கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர்  சந்திப்பை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.பதிவுலக வரலாற்றில் நடந்த மிக முக்கியமான சந்திப்பாக அது அமைந்தது.அந்த நினைவுகளில் இருந்து இன்னும் பல பதிவர்கள் மீளவில்லை.அதற்குள் இந்த வருட பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன.

சென்ற ஆண்டு இந்த மாபெரும் சந்திப்பை முன் நின்று நடத்திய அதே குழுதான் இந்த சந்திப்பையும் நடத்த முன் வந்துள்ளது.சென்ற ஆண்டைப் போலவே முகவும் சிறப்பாகவும், பதிவர்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் இந்த சந்திப்பு அமைய குழு நண்பர்கள் வார வாரம் சந்தித்து ஆலோசனை செய்து திட்டங்களை வகுத்து அதன் பேரில் செயல்படுத்தி வருகிறோம்.இதற்காக பல குழுக்கள் அமைக்கப்பெற்று வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.இந்த சந்திப்பிற்கு ஏற்படுத்தப் பட்ட குழு விபரங்களை
இங்கே காணலாம்.

சென்ற ஆண்டு சந்திப்பின் போது பதிவர்களின் அறிமுகம், மூத்த பதிவர்களுக்கு பாராட்டு , பதிவர்களின் கவியரங்கம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என பதிவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்தததைப் போலவே இவ்வருடமும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த வருடம்  பதிவர்களின் அறிமுகம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என அடிப்படை நிகழ்வுகளோடு பதிவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்வுதனை வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பதிவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சி
ஒரு வலைப்பதிவராக மட்டும் நாம் அறியும் பதிவரின் இதர திறமைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில பதிவர்கள் தங்களின் திறமையை நிறைய மேடைகளில் வெளிப்படுத்தி வரலாம்.சில பதிவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்த மேடைகள் இல்லாமல் இருக்கலாம்.எனவே பதிவர்களின் மற்ற திறமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கோடு இந்நிகழ்ச்சி ஏற்பாடு ஆகி வருகிறது.அதாவது பாடும் திறமை, நடிக்கும் திறமை, நடனம் ஆடும் திறமை, பல குரலில் பேசி அசத்தும் திறமை, பதிவர்கள் ஒரு குழுவாக சிறு நாடகம் அமைப்பது என பதிவர்கள், தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இருத்தல் நலம்.

இதில் பங்கேற்கும் பதிவர்கள் வரும் 10.08.2013 க்குள் தங்கள் விபரங்களை 9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
நூல் வெளியீடு:

கடந்த ஆண்டு நடந்த பதிவர் சந்திப்பில் பதிவர் சசிகலா அவர்களின் 'தென்றலின் கனவு' கவிதை நூல் வெளியிடப்பட்டது.அதே போல் இந்த வருடமும் பதிவர்கள் தங்களின் நூலை இந்த நிகழ்வில் வெளியிடலாம். அவ்வாறு நூல்
வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 05.08.2013 க்குள் 9894124021 இந்த எண்ணிலோ அல்லது kavimadhumathi@gmail.com இந்த மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.குறிப்பிட்ட தேதிக்குள் சொன்னால் மட்டுமே நிரலில் அது சேர்க்கப்படும் என்பதை சொல்லிக்கொள்கிறோம்.
(கோவை பதிவர் அன்பு நண்பர் சங்கவி அவர்களின் கவிதை நூல் வெளியிடுவது மட்டும் உறுதியாகியிருக்கிறது)



வருகைப் பதிவு:

கடந்த முறை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள், முறையாக தங்களின் வருகையை மின்னஞ்சல் வாயிலாக உறுதி படுத்திய பின்னரே  வருகை தருவோரின் பட்டியலில் அவர்களின் பெயரை இணைத்துக்கொண்டோம். அதைப் போலவே இந்த முறையும் பதிவர்கள் தங்களின் வருகையை தயவு கூர்ந்து மின்னஞ்சலில் உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.கடந்த முறை பதிவு செய்தவர்கள் தவிர நிறைய பதிவர்கள் சந்திப்பிற்கு வந்ததால் அவர்களை சரியான முறையில் உபசரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.எனவே வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள். உணவு மற்றும் உபசரிப்பு போன்றவை வருகைப் பதிவு செய்த பதிவர்களை வைத்தே தீர்மானிக்கப் படுவதால் தங்களின் வருகையை அவசியம் மின்னஞ்சல் வாயிலாக உறுதிபடுத்தவும்.
கீழ்க்காணும் பதிவர்களை தொடர்பு கொண்டு வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
  -          ஆரூர் மூனா செந்தில்  
·         அஞ்சாசிங்கம் செல்வின்
·         சிவக்குமார் மெட்ராஸ்பவன்
·         பிரபாகரன் பிலாஸபி(சென்னை)
·         தமிழ்வாசி பிரகாஷ் மதுரை
·         சதீஷ் சங்கவி கோவை
·         வீடு சுரேஷ்குமார் திருப்பூர்
·         கோகுல் மகாலிங்கம் பாண்டிச்சேரி
·         தனபாலன் - திண்டுக்கல்

நன்கொடை:



இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது.சென்றமுறை மக்கள் சந்தை கொஞ்சம் உதவியது.இந்த முறை அப்படியேதும் வாய்ப்பு இல்லை என்றேத் தெரிகிறது.. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பதிவர்கள்  மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்..பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்து  தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.

இதுவரை சென்னை பதிவர் சந்திப்பிற்கு வர சம்மதம் தெரிவித்துள்ள பதிவர்கள் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.  எண்ணிக்கை கூடும்போது இப்பட்டியல் புதிதாக பகிரப்படும்:

                                                                 



ஜோதிஜி திருப்பூர்
கவிதைவீதி செளந்தர்
சரவணன்(ஸ்கூல் பையன்)
ரூபக்ராம்
வேடியப்பன்(டிஸ்கவரி புக் பேலஸ்)
சசிகலா (தென்றலின் கவிதைகள்)
ரஹீம் கஸாலி
சிராஜுதீன்
காணாமல் போன கனவுகள் ராஜீ
கேபிள் சங்கர்
தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை
கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி
தனபாலன் - திண்டுக்கல்
வீடு சுரேஷ்
சசிமோகன்
இரவுவானம் சுரேஷ்
நாய் நக்ஸ் நக்கீரன்
சின்ன சின்ன சிதறல்கள் அகிலா,
நிகழ்காலம் எழில்
கலாகுமரன்
கோவை ஆவி
உலகசினிமா பாஸ்கரன்
சுட்டிமலர்
கோவை கமல்
கோவை சதிஸ்
வெண்பா சுஜாதா
கோவை நேரம் ஜீவா
கோவை சக்தி
இப்படிக்கு இளங்கோ
ஒட்டக்கூத்தன்
வா.மு.முரளி
ஒட்டக்கூத்தன்
கோவை கோவி
சாமக்கோடங்கி பிரகாஷ்
கோவை ராமநாதன்
சதீஸ் சங்கவி
சிபி செந்தில்குமார்
வீரகுமார்
குருவை மாதேஸ்
குணா
சேலம் தேவா
கோகுலத்தில் சூரியன் வெங்கட்
கிராமத்துக் காக்கை
விஜயன் துரைராஜ் கடற்கரை
கருத்து கந்தசாமி
செல்லப்பா (‘இமயத்தலைவன்’) (‘செல்லப்பா தமிழ் டயரி’)
முகமது சபி சக்கரக்கட்டி
அ.சிவசங்கர்
தங்கம் பழனி
முனைவர் இரா.குணசீலன்
சைதை அஜீஸ்
குடந்தையூர் ஆர். வி. சரவணன்
முரளிக்கண்ணன் மதுரை
பெருங்குளம் ராமகிருஷ்ணன்
சசிகலா திருவண்ணாமலை
ஜீவன் சுப்பு,
சிவகாசிகாரன் ராம் குமார்,
சதீஸ் செல்லதுரை
கடல் பயணங்கள் சுரேஷ் குமார்
சுப்புரத்தினம்
ராகவாச்சாரி
ரேகா ராகவன்
ஆதிமனிதன்
சமீரா 
நம்பி
வழிப்போக்கன் ராஜேஷ்
பழனி கந்தசாமி(மன அலைகள்)
புலவர் இராமானுஜம்
சென்னை பித்தன்
கவிஞர் மதுமதி
பாலகணேஷ் (மின்னல்வரிகள்)
மோகன்குமார்(வீடு திரும்பல்)
கவியாழி கண்ணதாசன்
பட்டிகாட்டான் ஜெய்
டி.என்.முரளிதரன்
கே.ஆர்.பி.செந்தில்
ஆரூர் மூனா செந்தில்
அஞ்சாசிங்கம் செல்வின்
அரசன் ( கரைசேரா அலை)
சீனு (திடங்கொண்டுபோராடு)
பிலாசபி பிரபாகரன்
சிவகுமார்(மெட்ராஸ்பவன்)
 
 
மேலதிக தகவல்கள் அடுத்த பதிவில் வெளியாகும்..பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து  தங்களது வலைப்பதிவில் எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.(இதே பதிவை அப்படியே நகலெடுத்து பதியவும் செய்யலாம்)

LinkWithin

Related Posts with Thumbnails